இலங்கை

குணமடைந்தோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது!

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 652 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 90 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 559 ஆக காணப்படுகின்றது.

இதில் 6 ஆயிரத்து 339 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 390 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு

Suki

பயணத் தடை தளர்வு- போராட்ட பூமியாக மாறியுள்ள தென்னிலங்கை!

Suki

“இராணுவமே வெளியேறு” என்றால், அடுத்த நிமிடமே எம்மைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்து விடுவார்கள்- நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்

Suki

Leave a Comment