இந்தியா

புதுச்சேரி சட்டப்பேரவையின் வரவு- செலவுக் கூட்டத்தொடர் ஆரம்பம்

புதுச்சேரி சட்டப்பேரவையின் வரவு- செலவுக்கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
2019- 2020 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுக்கூட்டத்தொடரில் துணைநிலை ஆளுநர் உரை நிகழ்த்தவுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியுள்ளனர். அத்துடன் பொலிஸாரும் பேரவை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை ஆளும் கூட்டணி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்தும், பேரவையில் பேசவேண்டிய முக்கிய விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Related posts

ஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள்

admin

நடிகர் விஜய்யின் தளபதி-65 படத்தின் தலைப்பும் முதல் பார்வையும் வெளியாகியுள்ளது.

Suki

விபத்தில் நண்பரை இழந்த குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

Suki

Leave a Comment