சினிமா

ஆரம்பமாகிறது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம்

இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் நடிப்பில் பிரமாண்டமாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஆரம்பமாகவுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிப்பத்கு நாளுக்கு நாள் ஒவ்வொரு பிரபலங்கள் இணைந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அந்தவகையில் இத்திரைப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், விக்ரம், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ், அமலா போல், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, அனுஷ்கா, என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றார்கள். அதேநேரம் இதில் திரிஷாவையும் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்ததைகளும் ஆரம்பமாகியுள்ளது.
செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகவுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்துக்காக 12 பாடல்களை எழுத உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.  அந்தக் காலத்தில் உள்ள வார்த்தைகளை இந்தக் காலத்தில் உள்ள மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுத உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இத்திரைப்படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவுகளை மேற்கொள்கின்றார்.
டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாள் அன்று தான் படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படத்தில் பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே மணிரத்னத்துடன் நாயகன், தளபதி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிம்பு லவ் சர்ச்சையை பேசிய ஸ்ரீநிதி, மருத்துவமனையில் அனுமதி

Suki

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சதீஷ் : வைரலாகும் ஒளிப்படம்!

admin

இராஜமௌலியின் அடுத்த திரைப்படத்தில் சாய் பல்லவி

admin

Leave a Comment