இலங்கை

அரசின் சட்டவிதிமுறைகளை மீறி இரகசிய திருமணத்தில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக திருமண வைபங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் அனைத்துக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம்- தையிட்டி பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறி இரகசிய முறையில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 21பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட தையிட்டி பகுதியில் இரகசியமான முறையில் திருமண நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக அறிந்த  சுகாதார பிரிவினர், திருமண நிகழ்வில் பங்குப்பற்றி இருந்த மணமக்கள் குடும்பம் உள்ளிட்ட ஏனைய சிலரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தினர்.

அதில் சிலருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் 21 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம்- நெல்லியடி பகுதியிலுள்ள பிரபல வெதுப்பக ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து  அவருடன் பணிப்புரிந்த ஏனைய ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

கனடா கப்பல் ஏறி மாட்டிக்கொண்ட யாழ் இளைஞனுக்கு வந்த சோதனை.!

Suki

மேலைக்கடலில் பிளாஸ்டிக் கப்பலும் – வட கடலில் பேருந்துகளும்

Suki

மேலும் 55 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Suki

Leave a Comment