சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளரான வணக்கத்திற்குரிய மாகல்கந்த சுதந்த தேரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருடைய வாகன சாரதிக்கு முதலில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே மாகல்கந்த சுதந்த தேரருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.