இலங்கை

மிருகக்காட்சிசாலைகளில் உள்ள அனைத்து விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்

நாட்டிலுள்ள அனைத்து மிருகக்காட்சிசாலைகளிலும் உள்ள விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ரிதிகம சபாரி மற்றும் பின்னவல சரணாலயத்தில் உள்ள விலங்குகளுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் வனஜீவராசிகள் அமைச்சர் குறிப்பிட்டார்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Related posts

மக்கள் பலத்திற்கு முன்னால் அதிகார பலம் செல்வாக்குச் செலுத்தாது – வீரசுமண வீரசிங்க

Suki

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 170,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

admin

ஐ.எம்.எப். ஒப்பந்தம் குறித்து கடன்வழங்குநர்களுக்கு விளக்கமளிக்க தயாராகும் இலங்கை!

Suki

Leave a Comment