இலங்கை பிரதான செய்திகள்

ஒரேயொரு ஓட்டத்தால் மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான பரபரப்பான ரி-20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா ஒரேயொரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் 3 ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது. குயின்டன் டி கொக் 72 ஓட்டங்களைப் பெற்றார்.

அடுத்து துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று ஒரேயொரு ஓட்டத்தால் தோல்வியடைந்தது.

இருபதாவது ஓவரில் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதிப் பந்தில் ஃபபியன் அலன் சிக்சர் அடித்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் வெற்றிபெற இயலவில்லை. போட்டியின் நாயகனாக 4 ஓவர்களில் 13 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுக்களை முக்கிய தருணத்தில் வீழ்த்திய தென்னாபிரிக்காவின் தப்ரைஸ் ஷம்சி தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் ரி-20 தொடரில் தென்னாபிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான நான்காவதும் தொடரின் வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிப்பதுமான ரி-20 போட்டி நாளையதினம் நடைபெறவுள்ளது.

Related posts

மணல் கடத்தல் கும்பல் மீது அதிரடிப்படை துப்பாக்கி சூடு! ஒருவர் படுகாயம்!!

Suki

உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ படபிடிப்பு நிறைவு

Suki

முக்கிய அறிவிப்பு – பரீட்சைகள் திணைக்களம்

Suki

Leave a Comment