அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சுமார் 800 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாதுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பருப்பு, வெள்ளைப்பூடு, ரின்மீன், பால் வகைகள், இஞ்சி, பெருஞ்சீரகம் ஆகிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களே இவ்வாறு விடுவிக்கப்படாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், டொலர் தட்டுப்பாட்டிற்கு அரசாங்கம் விரைவில் தீர்வினைப் பெற்றுத்தரும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.