இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள்

சுமார் 800 கொள்கலன்கள் அத்தியாவசிய பொருட்கள் – கொழும்புத் துறைமுகத்தில்

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சுமார் 800 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாதுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பருப்பு, வெள்ளைப்பூடு, ரின்மீன், பால் வகைகள், இஞ்சி, பெருஞ்சீரகம் ஆகிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களே இவ்வாறு விடுவிக்கப்படாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், டொலர் தட்டுப்பாட்டிற்கு அரசாங்கம் விரைவில் தீர்வினைப் பெற்றுத்தரும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரயில் மீது மோதிய டிப்பர் வாகனம் – சாரதி படுகாயம்!

Suki

ராஜபக்ஷாக்கள் அரசியலிலிருந்து ஓய்வுபெற வேண்டிய காலம்

Suki

 மசாஜ் சென்டர்களில் மாணவர்கள் கூட்டம்!

Suki

Leave a Comment