த்தர பிரதேச மாநிலம் கான்பூரில் டாட் மில் குறுக்கு சாலை பகுதி அருகே இன்று மின்சார பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்தவர்கள் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக கான்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துச் சாவடி வழியாக வேகமாக வந்த பேருந்து அங்கிருந்த மூன்று மகிழுந்துகள் மற்றும் பல உந்தருளிகளை சேதப்படுத்தியதுடன் பார ஊர்திமீது மோதியுள்ளது.
இதனையடுத்து பேருந்தின் சாரதி தலைமறைவாகியுள்ளார். அவரை காவல்தறையினர் தேடி வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.