க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தமக்கென பரிந்துரைக்கப்பட்ட அனைத்துப் பாடங்களையும் பூர்த்தி செய்தவர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசியின் இரண்டாம் டோஸை பெற்றுக் கொள்ளு மாறு சுகாதாரத் திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.தற்போது பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருவதாக தொற்று நோய் பிரிவின் பிரதம விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.