இலங்கை

பத்தலகொட்டுவ – மஹபத்தனை வனங்களில் காட்டுத்தீ

வெல்லவாய – பத்தலகொட்டுவ மற்றும் மஹபத்தனை வனங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் ஏற்பட்ட இந்த காட்டுத்தீயினால் சுமார் 100 ஏக்கர் வரை எரிந்து நாசமாகியுள்ளதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் நிலவும் வறண்ட காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக அதிவேகமாக பரவிய தீயை கட்டுப்படுத்த இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

எவ்வாறாயினும், தீ முழுமையாக அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

யாழ்.நகரிலுள்ள தனியார் வங்கி வாசலில் வழிப்பறி கொள்ளை!

Suki

மந்திரீகர் கொலை விவகாரம்: மந்திரீகருடன் தகாத தொடர்பிலிருந்த பெண், மற்றுமொருவருடனும் தொடர்பு – பெண் உள்ளிட்ட மூவர் கைது

Suki

‘சைரன்’ ஒலியெழுப்பும் ஜெயம் ரவி

Suki

Leave a Comment