ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள அரச எதிர்ப்புப் பேரணி இன்று (30) ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.

இன்றைய 5 ஆம் நாள் பேரணி யக்கலையிலிருந்து ஆரம்பமாகி பேலியகொடையை வந்தடையவுள்ளது.
அதன் நாளை (01) மே தினத்தை முன்னிட்டு பேலியகொடையிலிருந்து கொழும்பு, சுதந்திர சதுக்க மாவத்தை நோக்கிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி கண்டியில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஆரம்பமாகிய பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கு பற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.