இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை மின்சார சபையின் ஒன்லைன் கட்டண தளத்தை ஹெக் செய்தவருக்கு விளக்கமறியல்

இலங்கை மின்சார சபைக்கு (CEB) மின் கட்டணம் செலுத்த பயன்படுத்தப்படும் இணைய கட்டண நுழைவாயிலை ஹெக் செய்து 100 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த முக்கிய சந்தேக நபரை 2023 ஜனவரி 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் இணையத்தளத்தை ஹெக் செய்த ஒருவர் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவர் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் தன்னை ஒரு தொழிலதிபர் மற்றும் ஒரு மென்பொருள் பொறியியலாளர் என அடையாளப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் 10-20 சதவீத தள்ளுபடிக்கு தகுதியுடையவர் என நுகர்வோரின் மின் கட்டணத்தை அவர்களின் கடன் அட்டைகள் மூலம் செலுத்த முன்வந்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் சந்தேகநபர் சுமார் 400 பேரை ஏமாற்றியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
பணம் செலுத்தப்பட்டது மற்றும் ரசீது தயாரிக்கப்பட்டது, ஆனால் CEB உண்மையில் செலுத்தப்படவில்லை.
25 வயதுடைய திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கடவத்தையில் சிறிது காலம் தங்கியுள்ளார்.
சிஐடியின் கூற்றுப்படி,குறித்த நபர் க.பொ.த (உ/த) வரை கல்வி பயின்றுள்ளார்.

Related posts

டொலரின் கொள்வனவு விலை 300 ரூபாவாக குறைவடையும்

Suki

திருமண வைபவங்களை எதிர்காலத்தில் நடத்தவிருப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு

Suki

அதிபரின் குறுந்தகவலுடன் ஆசிரியர்கள் மாகாணங்களிடையே பயணிக்கலாம்

Suki

Leave a Comment