பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஆலோசனைக்கமைய அவசர சேவைகளின் தேவை கருதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் உயர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கும் இடமாற்றமும் புதிய நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஊடகப்பிரிவு மற்றும் போதைப்பொருள் பொறுப்பான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு , 6 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் இரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றமும் வழங்கப்பட்டுள்ளது.
அற்கமைய சட்டப்பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மேலதிகமாக ஊடகப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராகவும் கே.வீ.டீ.ஏ.ஜே.கரவிட நியமிக்கப்பட்டுள்ளார்.
விநியோக பிரிவிலிருந்து இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்ட பதில் பிரதி பொலிஸ்மா அதிபர் ஜே.பீ.டீ.ஜயசிங்க , போதைப்பொருள் பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து போதைப்பொருள் பிரிவிற்கு மாற்றப்பட்ட பதில் பிரதி பொலிஸ்மா அதிபர் பீ.லியனகே இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவை தவிர மேலும் 5 பொலிஸ் அத்தியட்சகர்கள் , பெண் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.