உலகம் பகலவன் TV பகலவன் செய்திகள்

நைஜீரியாவின் புதிய ஜனாதிபதியாக போலா டினுபு தேர்வு!

நைஜீரியாவின் ஜனாதிபதி தேர்தலில், லாகோஸ் மாகாண முன்னாள் ஆளுநர் போலா டினுபு வெற்றி பெற்றதாக நைஜீரியாவின் சுதந்திர தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற எதிர்பார்ப்பு மிக்க ஜனாதிபதி தேர்தலில், 36.61 சதவீத வாக்குகளைப் பெற்ற ஆளும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரான டினுபு வெற்றிபெற்றார்.

1999இல் நாடு ஜனநாயக ஆட்சிக்கு திரும்பியதில் இருந்து நைஜீரியாவின் ஐந்தாவது ஜனாதிபதியாக டினுபு பதவியேற்கவுள்ளார்.

மிகக் கடுமையான போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் போலாவுடன் அடிகு அபுபக்கர், பீட்டர் ஓபி, ரபிபு வாஙக்வாசோ ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் 25 மாகாணங்களில் அதிக வாக்குகளை பெற்றனர்.

71 வயதாகும் டினுபு, 1999 மற்றும் 2007க்கு இடையில் லாகோஸில் ஆளுநராக இருந்தார், அங்கு அவர் தற்போது நைஜீரியாவின் பொருளாதார மையமாக இருக்கும் மாநிலத்தின் மாற்றத்திற்கு வழிவகுத்த முன்னோடி சீர்திருத்தங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Related posts

தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கவும் – இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் கோரிக்கை

Suki

இந்தோனேசிய வீதிகளில் தஞ்சமடைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் – ஐ.நா.விடம் மன்றாட்டம்!

admin

மன்னார் மாவட்டத்தில் பாடசாலைகள் ஆரம்பம் – மாணவர்களின் வருகை குறைவு

Suki

Leave a Comment