Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை பலியெடுத்த விபத்து.

அம்பாந்தோட்டையில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

அம்பாந்தோட்டை கொழும்பு பிரதான வீதியில் பயணித்த லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மற்றைய நபர் படுகாயங்களுடன் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பலியானவர்கள் தொடர்பிலான தகவல்

சம்பவத்தில் கார் சாரதியான 55 வயதுடைய குடும்பஸ்தரும் காரின் முன் ஆசனத்தில் இருந்து பயணித்த அவரது 27 வயதுடைய மகனும் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே பலியாகினர்.

காரின் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த கார் சாரதியின் சகோதரரான 48 வயதுடைய குடும்பஸ்தர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்

Related posts

இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் இறக்குமதி தடையை நீக்க எந்தவித தீர்மானமும் இல்லை: அரசாங்கம்

Suki

புகைப்பிடிப்பவர்களுக்கான அறிவிப்பு

Suki

பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில் அடுத்த வாரம் தீர்வு வழங்கப்படும் – திலும் அமுனுகம

Suki

Leave a Comment