Headline Headlines News இந்தியா தமிழ்நாடு பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

இந்தியாவில் பாரிய ரயில் விபத்து – 250 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது.

இந்த விபத்தில் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

18 க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் கடுகதி ரயில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பெங்களூருவில் இருந்து கொல்கத்தா சென்ற ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துள்ளானது.

Related posts

ஆசிரியர் தினத்தில் முகத்தில் கேக் பூசிய மாணவர்களுக்கு நடந்த கதி

Suki

எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் விவசாயிகளையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் – சஜித் பிரேமதாச

Suki

இந்தியன் என்ற அடையாளமே காலம் கடந்து வாழக்கூடியது – கமல்ஹாசன்

admin

Leave a Comment