Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு 10000 ரூபாய் சம்பள அதிகரிப்பு – சற்று முன் ஜனாதிபதி அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் சற்று சபையில் முன்வைத்து.உரையாற்றியுள்ளார்.

🛑அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக அடுத்த ஆண்டுக்கு 283 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஜனாதிபதி

🛑ஓய்வூதியம் பெறுவோருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 2,500 ரூபாய் அதிகரிக்க முன்மொழிவு – ஜனாதிபதி

🛑2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தேர்தலுக்கானது அல்ல மாறாக எதிர்காலத்துக்கான திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

🛑ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான வாழ்க்கைச் செலவுகளுக்கான நிலுவைத் தொகை அடுத்த ஆண்டு ஒக்டோபர் முதல் தவணை முறையில் வசூலிக்கப்படும் – ஜனாதிபதி

🛑2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு – ஜனாதிபதி

🛑ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளாகியுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கு மட்டும் ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

🛑அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் / பணத்தை அச்சிட வேண்டும், கடன் பெற வேண்டும். – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

🛑அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் / பணத்தை அச்சிட வேண்டும், கடன் பெற வேண்டும்.

🛑ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்துவது சமவுடைமை கொள்ளைக்கு எதிரானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

🛑பின்னடைவைச் சந்தித்த இலங்கையின் பொருளாதாரம், கடந்த ஆண்டில் வெற்றிகரமாக மீண்டுள்ளது. கடின உழைப்புக்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் இருந்தபோதிலும், நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில் மற்றவர்கள் ஈடுபட்டனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

🛑நாட்டின் நலனுக்காக அனைவரும் முழு மனதுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

🛑பணவீக்க வீதத்தை ஒற்றை இலக்கத்திற்கு வெற்றிகரமாகக் குறைத்தமையே நாட்டின் மீட்சிக்குக் காரணம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

🛑2024 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமிருந்து வரி அறவிடப்படாது – ஜனாதிபதி

🛑யாழ்ப்பாணம் பூநகரி நகர் அபிவிருத்தி – 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
யாழில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி

🛑விவசாயத்தை நவீனமயமாக்கவும் நெல் உற்பத்தியை அதிகரிக்கவும் தீர்மானம்

🛑சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த அரச வங்கிகள் ஊடாக இலகு வட்டி வீதத்திலான கடனுதவி, இதற்காக 30 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்ய்யப்படும்

🛑சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளை வழங்குவதற்காக ஹோட்டல்களில் உள்ளூர் ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களை நிறுவ 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

🛑ஏனைய நாடுகளின் நிலைக்கு ஏற்ப மருத்துவ ஆராய்ச்சி, 75 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

🛑13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும்
தொழிற்கல்வி நிறுவனங்களை மாகாண சபைகளுக்கு மாற்ற தீர்மானம்.

🛑தகவல் தொழில்நுட்ப பட்டதாரி பயிற்சி திட்டம்.

🛑ஆங்கில மொழி கல்வியறிவுக்கான திட்டம்.

🛑பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து அரச பல்கலைக்கழகங்கள் புதிய காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தல்

🛑அரசு சாரா பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்த வலுவான சட்டங்கள் கொண்டு வரப்படும்
தனியார் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு சலுகை கடன் திட்டம். வேலை கிடைத்தவுடன் திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு – ஜனாதிபதி

🛑நாட்டில் உள்ள பழைய கல்விமுறை நீக்கப்பட்டு நவீன உலகுக்கு பொருத்தமான கல்வி முறைமை ஏற்படுத்தப்படும் – ஜனாதிபதி

🛑உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு
கிராமங்களில் வீதிகள் அபிவிருத்திக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் – ஜனாதிபதி
நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் எதிர்காலத்தில் மேலதிகமாக 4 பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்படும்.

🛑பல்கலைக்கழகங்களைத் தொடங்கும் அதிகாரம் தனியார் துறைக்கு
மலையக பகுதியில் கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்திக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி

🛑பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க துரித நடவடிக்கை, இதற்காக 4 பில்லியன் ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கீடு – ஜனாதிபதி

🛑பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

Related posts

யாழில் பெருமளவான மிதிவெடிகள் மீட்பு விசாரணைகள் தீவிரம்!

Suki

பலருக்கு “நிரந்தர குடியுரிமை” வழங்கப்படும் என கனேடிய அதிகாரிகள்

Suki

நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை-வளிமண்டலவியல் திணைக்களம்

Suki

Leave a Comment