உணவகங்களிலும், பொது இடங்களிலும் தங்களுக்கு பொருட்களை இலவசமாக அளிக்க வேண்டுமென கூறி வன்முறையில் ஈடுபடும் திமுகவினரின் கையில் ஆட்சி – அதிகாரம் சென்றால் நாட்டு மக்களின் நிலை என்னவாகுமென கேள்வியெழுப்பியுள்ளதுடன், திமுக தலைவர் ஸ்டாலினையும் மிக காட்டமாக விமர்சித்துள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.
அதிமுக சார்பில் மொழிப்போரட்ட ஈகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி,”கோடநாடு கொள்ளை விவகாரத்தில் என் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. அந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு திமுகவினர் ஜாமீன் அளிப்பதும், திமுக வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்காக வாதாடுவதும் இந்த விவகாரத்தின் உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு உணர்த்தும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “உணவகங்களில் தாங்கள் உண்ட உணவுக்கான தொகையை அளிக்காமல் குத்துச்சண்டையில் ஈடுபடும் திமுகவினர் கையில் ஆட்சி – அதிகாரம் சென்றால் நாடு என்னவாகும். திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு கானல் நீராக போகும்” எனவும் ஸ்டாலினை விமர்சித்து பேசியுள்ளார்.