ஜம்மு- காஷ்மீருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அப்பிரதேச மக்கள் சிறந்த வரவேற்பை அளித்துள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர், லே பகுதிக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, அப்பிரதேச மக்கள் தங்களது கலாசார முறைப்படி மேளம் முழங்க வரவேற்றுள்ளனர்.
பின்னர் பூங்கொத்துகள் மற்றும் வெண்ணிற சால்வைகளை பிரதமர் மோடிக்கு, அவர்கள் பரிசாக வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து லே பகுதியிலுள்ள விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார்.