மக்களின் வாழ்வாதாரத்தை சுயதொழில் முயற்சியின் மூலமாக மேம்படுத்தும் நோக்கில் வஜ்ரா மார்ட் நிறுவனத்தினால் கலந்தாலோசனை நிகழ்வு இடம் பெற்றது.குறித்த நிகழ்வானது திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் நேற்று (19) இடம் பெற்றது. இதில் சுயதொழில் விருத்தி திறன்களை விருத்தி செய்தி பொருளாதார முன்னேற்றங்களை வியாபாரம் மூலமாக அபிவிருத்தியடையச் செய்தல் உள்ளிட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. இதில் டாக்டர் அமுதபொற்செல்வன், ஜெய் சுவாமி, திராவிடச் செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.