ரஷ்ய இராணும் உக்ரையனின் தெற்கு கடற்கரை நகரான ஒடிசா உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது ஆளில்லா விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தாக்குதல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 6 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யா, பொது மக்கள் மீது தொடர்ந்தும் தாக்குதலை நடத்திவருவதாகவும், ஆளில்ல விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக இதுவரை 18 அடுக்குமாடிகள் அழிந்துள்ளதாக உக்ரையின் ஜனாதிபதி விளடிமீர் செலன்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் ஈரானால் வழங்கப்பட்ட ஆளில்ல விமானங்கள் ஊடாக உக்ரையின் பல பகுதிகளை ஊடுறுவி தாக்கிவருவதாகவும் ஜனாதிபதி செலன்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.