இலங்கை பிரதான செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது பெண்கள் கற்களை வீசி தாக்குதல்

அநுராதபுரம் விஜயபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது பெண்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் 6 பெண் சந்தேக நபர்களையும் நான்கு ஆண் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

விஜயபுர, கடபஹ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், அங்கு காணப்பட்ட பெண்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பல பெண்களும் ஆண்களும் கற்களுடன் வந்து பொலிஸ் அதிகாரிகளை தாக்கினர்.

Related posts

மனிதனை மனிதன் பிடித்து உண்ணும் நிலை! கதறும் இலங்கை மக்கள்.

Suki

இலங்கையில் உயர்தர மருந்துகளை உற்பத்தி செய்ய செய்ய திட்டம்

Suki

புரவியின்கோர தாண்டவம் வல்வெட்டி துறையில் 40 குடும்பங்கள் இடம்பெயர்வு

Frank Vithusan

Leave a Comment