Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் மாடு கடத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ?

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்தி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவிலிருந்து மண்டைதீவு நோக்கி சட்ட விரோதமாக மாடுகள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றி வளைப்பின்போது மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடத்திச் செல்லப்பட்ட எட்டு மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தற்போதும் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் குற்ற விசாரணை பிரிவில் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக ஊர் காவல்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

நான்காவது அலையை உருவாக்குவதை அரசியல்வாதிகள் தவிர்க்கவேண்டும் –நாமல்

Suki

சதி செய்யும் ரணில் – கடும் வருத்தத்தில் கோட்டாபய

Suki

சிறைச்சாலையினுள் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து சென்ற சிறைச்சாலை காவலர் கைது

admin

Leave a Comment