Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அத்துமீறல் – தொடரும் போராட்டம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அத்துமீறி பறிக்கப்படுவதற்கும் அநீதிகள் இழைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்றையதினம்(04) கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து பொதுமக்களுடன் இணைந்து நடைபவணியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னால் உள்ள போராட்ட களத்தை வந்தடைந்ததுடன் அங்கிருந்து கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது அமைச்சரவை தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள் கல்முனை உப பிரதேச அலுவலகமாக கருதி மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத தீர்மானங்கள் அனைத்தையும் இரத்து செய்யுங்கள் காணி நிதி அதிகாரங்களை வழங்குங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சுயாதீன தொழிற்பாட்டை உறுதிப்படுத்துங்கள் என பல்வேறு கோஷங்களை முன்வைத்து போராடி வருகின்றனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், செல்வராஜா கஜேந்திரன் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

இலங்கை கடலுக்குள் நுழைந்த இந்தியப் படகுகளுக்கு நேர்ந்த கதி

Editor2

உயிருடன் இருக்கும்போதே மரணச் சான்றிதழ் பெற்றுள்ள நபர்!

Suki

தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த தீர்மானம்.

Suki

Leave a Comment