காதலி ஒருவர் உயிர் மாய்த்து 50வது நாளுக்குப் பின்னர்,காதலனும் உயிரை மாய்த்த சம்பவமானது யாழ்ப்பாணத்தில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிங்காவத்தை, துர்க்காபுரம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த கதிர்காமலிங்கம் கோபிசன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞரின் காதலியான தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 50 நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
இதனை அடுத்து குறித்த இளைஞன் கடந்த 9 ஆம் திகதி,உயிரை மாய்துள்ளார்.